பெண்ணியவியாதிகளும் மாற்று சிந்தனையாளர்களும் கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க

மார்ச் 7, 2010

நித்தியானந்தர் மேட்டர் வெளி வந்ததும் யாரு கொதிச்சாங்களோ இல்லையோ பெண்ணியவியாதிகள், சட்ட நிபுணர்கள், மாற்றுப்பார்வையாளர்கள், நடுநிலையாளர்கள் கொதிச்ச கொதியில் அரபிக்கடல் அரை மணிநேரம்
சூடாயிப்போச்சி, இவங்க அடிக்கிற ஜல்லியைதான் கொஞ்சம் பார்ப்போம்.

பாவம் அந்தப்பொண்ணு அது என்ன தப்பு பண்ணிச்சி நாளைக்கு ரோட்டுல எப்படி தல நிமிர்ந்து நடக்கும்?

அடிங்க அந்த பொண்ணு அங்க என்ன ஒலக சமாதானத்தை பத்தியா பேச போயி இருந்தது? சின்ன பாப்பா பாருங்க என்ன பண்றேன்னு தெரியாம பண்றதுக்கு. அது தல நிமிர்ந்து நடந்தா என்ன நடக்காட்டி என்ன? நாட்ல பசியாலும் பாலியல்
கொடுமையாளும் எவ்வுளவு பொண்ணுங்க செத்துட்டு இருக்காங்க அங்க போயி காட்டுங்கடா உங்க பரிதாபத்தை,கிளம்பிட்டானுங்க பெண்களைப்பார்த்து பரிதாபப்பட.

அடுத்து நம்ம சட்ட நிபுணர்கள், இவர்களின் கருத்துப்படி 18 வயது நிரம்பிய ஒரு ஆணும் 18 வயது நிரம்பிய ஒரு பெண்ணும் மனசு ஒத்து உறவு கொளவது சட்டப்படி தப்பில்லையாமா?

இதே சட்ட நியாயங்களை உங்க வீட்ல இருக்குற ஒருத்தர் இது மாதிரி செய்யும் பொழுது சொல்வீங்களா? உங்களுக்கெல்லாம் ethics, moral கிடையவே கிடையாதா? கோடிக்கணக்கான பேருக்கு உபதேசம் செய்துவிட்டு ப்ராடுதனம் பண்ணிகிட்டு இருக்கார் அவருக்கு வக்காலத்து வாங்க வந்துட்டாங்க (உடனே ஆரம்பிப்பாங்க ஜல்லியை ஏமாறுவதற்கு ஆட்கள் இருக்குற வரை
ஏமாற்றுவதற்கு ஆட்கள் இருப்பாங்கன்னு.ஏன்னா இவங்க ரெண்டு பேரும் இருந்தா தான் இவங்க பொழப்பு ஓடும்).

உங்களைபோன்ற சட்ட மேதாவிகளின் உதவியால் தான் ரத்தோர் போன்ற நல்லவங்க ரூச்சிகா போன்றவர்களின் வாழ்க்கையை சீரழிச்சிட்டு 6 மாச
கடுங்காவல் தண்டனைகளோட தப்பிக்கிறாங்க.நல்லா நிலைநாட்டுறாங்க சட்டத்தை.

அடுத்து நம்ம ஒசை செல்லா அண்ணனை போன்ற மாற்றுச்சிந்தனையாளர்கள் – இவங்க மேல சொன்ன சட்ட நுணுக்களோட, நாளைக்கே இது உங்களுக்கும் நடக்கலாம், privacy, papa racy போன்ற பூச்சாண்டிகளோடும், ராமகிருஷ்ண
பரமஹம்சரே செய்து இருக்காரு இந்து தர்மப்படி இது தப்பே இல்ல இது பார்பணியம் ஆர்மோனியமுன்னு வழக்கமான ஜல்லி.

இவிங்களை கண்டிச்சாலும் கண்டிக்காட்டியும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக எவன் படுக்கையறையையும் எவன் வேணா பாக்கலாமுங்கிற நிலைமை வந்துடிச்சி.நீங்க தப்பு செய்யாட்டி உங்க பெட்ரூமை அடுத்தவன் பார்ப்பானோங்கிற பயம் உங்களுக்கு எதுக்கு? இந்த மாதிரி detective journalism வளர்ந்தால் தான் பொதுவாழ்க்கையில இருக்குறவங்களுக்கு கொஞ்சமாவது பயம் வரும்.

ராமகிருஷண பரமஹம்சர் என்னா இவரை மாதிரி சினிமாக்காரியோடவா கூத்தடிச்சிட்டு இருந்தாரு இல்ல யோகம் போகமுன்னு கோடியில
வாழ்ந்துகிட்டு இருந்தாரா? இந்த கோஷ்டி காலையில காபியில ஈ இருந்தா கூட அதுக்கு காரணம் பார்பணீயம் தான்னு சத்தியம் பண்ணுவாங்க.

அடுத்த கோஷ்டி உண்மைத்தமிழன் போன்ற நடுநிலைவாதிகள். இவிங்க பிரச்சனையே எவன் எந்த பிரச்சனையை பத்தி பேசினாலும் நீ யோக்கியமான்னு ஒரு கேள்வியை எழுப்ப வேண்டியது. ஷகிலா படத்தை போட்டதாலும்,தினகரன் சம்பவத்துல பின்வாங்கியதாலும், தவறான வியாபாரக்கொள்கை வெச்சி இருப்பதாலும் சன் டிவிக்கு அந்த தகுதி இல்லையாமா.

ஏன் ஒரு அயோக்கியன் இன்னொரு அயோக்கியனை காட்டிக்குடுக்குறது தப்பா? இதே சன் டிவி இதை வெளிக்கொண்டுவராட்டி யோச்சிபாருங்க இந்தாளு அடுத்த ஜந்து ஆண்டுகளின் எப்பேர்பட்ட வளர்ச்சியை அடைந்து இருப்பாரு? எத்துணை பேரின் வாழ்க்கை பறிபோயி இருக்கும்.எவன் கொண்டுவரான்னு பாக்காதிங்க சாமி என்ன கொண்டுவரான்னு பாருங்க.அப்படி பாத்தா பக்கம் பக்கமா பதிவெழுதி எல்லா டவுசரையும் உருவரமே நாம எல்லாம் ரொம்ப யோக்கியமா?

ஒரு புது கண்டுபிடிப்பை வேற இவரு வெளியிட்டு இருக்காரு. அவரு மனுசனாம அதனால அவரோட மனுச குணத்தால இந்த தப்பு நடந்து போச்சாமா.கொலை செய்றவன், கொள்ளையடிக்கிறவன் கூட தான் மனுசன் வுட்டுடலாமான்னு கேட்டா, அதெப்படி அவங்களுக்கெல்லாம் மாத்து கருத்து இல்லை இவருக்கு இருக்கு அப்படிங்கிறாரு.கொஞ்சம் விட்ட ஜெ, கலைஞர் வகையராக்கள் கொள்ளையே அடிக்கலைன்னு சொல்லுவார் போல.

அடுத்து இணைய பெண்ணியவியாதிங்க(ஆண்கள், பெண்கள் தனி கேட்டகிரி).இவர்களில் நிறைய பேர் இங்க எழுதுறதே பொண்ணுங்க கிட்ட ஜொள்ளுவிடத்தான். இவங்களை முக்கிய வேலையே பெண் பதிவர்களின் பதிவுகளில் பின்னூட்டங்கிற பெயரில் ஈளிச்சிட்டு நிக்குறது தான். பொதுவா கதை கவிதன்னு சுத்திட்டு இருப்பாங்க.

இது மாதிரிஏதாவது சாக்கு கிடைக்கும் பொழுது ஆம்புளைங்களே இப்படி தான்னு (ஏதோ இவங்க எல்லாம் ஆம்பளைங்களே இல்லங்கிற மாதிரி) கிளம்பி, அய்யோ பாவம் அந்த பொண்ணு அத்தோட வாழ்க்கை இப்படி வீணாப்போச்சே, இதுக்கு மேல அந்த பொண்ணு தல நிமிர்ந்து எப்படி நடக்கும்? வாயால எப்படி சாப்புடும்? எப்படி வெளிய வருமுன்னு?தற்கொலை பண்ணிகிட்டா என்ன பண்றதுன்னு ஒரே ஒப்பாரி. இந்த மாதிரி பொண்ணுங்க இருந்தா என்ன இல்லாட்டி தான் என்ன?

அடுத்த கேட்டகிரி பெண் பதிவர்கள். முதலில் கண்மணிங்கிறவங்க கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி ரஞ்சிதாங்கிறதால தானே வெளியிட்டிங்க இதுவே
அரசியல்வாதியோட பெண்ணாவோ இல்ல அதிகாரி வீட்டு பெண்ணாவோ இருந்தா இதை வெளியிட்டு இருப்பிங்களான்னு. ஏங்க ப்ரேமானந்தா என்ன நடிகையோடவா மாட்டினாரு? இவங்க சொல்றாங்க இந்த நடிகைகள் எல்லாம் நல்லவங்களாம் (புவனேஸ்வரியையும் சேர்த்து) ஆனா சாமியாருங்க மட்டும் கெட்டவங்களாமா. ஏன்னா இந்த நடிகைகள் எல்லாம் ஒண்ணும் தெரியாத பாப்பாகள் அவங்களை இந்த சாமியாருஙக சூனியம் வெச்சி கெடுத்துட்டாங்களாம்.

சின்ன அம்மணிக்கு ஒரு கவலை ஷோபாவை தற்கொலை செய்ய வைத்துவிட்டு, மவுனீகாவை வைத்துக்கொண்டு, அர்ச்சனாவுக்கு ரூட்டு விடும் பாலுமகேந்திரா போன்றவர்களைப்பற்றி யாரும் கவலைப்படுறது இல்லைன்னு.
எல்லார் கவலையும் ரஞ்சிதா, நயனதாரா மேல்தான்.என்ன கொடுமை இது.

அடுத்த சந்தனமுல்லை இவங்க புனித ஆத்துமா ரஞ்சிதாவை கண்ணகி,டயானா,அகலிகைன்னு யார் யாரோடவே ஒப்பிட்டு புனிதப்படுத்தி
இருக்காங்க. ஏங்க தெரசா,சீதா,மேரி இவங்களை எல்லாம் விட்டுடிங்க ஒரு வேளை இவங்க ரஞ்சிதா மேடம் ரேஞ்சுக்கு இறங்கி பொது சேவை செய்யலையோ?

அத்தோட நிறுத்தி இருக்கலாம் எதை நிலை நாட்டவோ எல்லா ஆம்புளைங்களும் எல்லா பெண்களிடமும் அளவு தேடுறவனுங்கன்னு சந்தடிசாக்குல அடிச்சி விட்டு இருக்காங்க..இதுக்கு ஒரு ஜம்பது பேர் சூப்பருங்க பின்னி பெடல் எடுத்துடிங்கன்னு பின்னூட்டம்..அதுல பாதி பேர் ஆம்பளைங்க மீதி பேர் பொண்கள், ஆனா அவங்களுக்கும் ஆண்களுக்கும் சம்மந்தமே இல்ல
ஏன்னா அவங்களுக்கு புருஷன்,புள்ளை,அண்ணன் தம்பின்னு யாரும் ஆண் இல்ல அப்படி இருந்தாலும் இருக்குறவன் எல்லாமே எல்லா பெண்களிடமும் அளவு தேடுறவங்க.நல்லா இருங்கடே.

இது எதுலையுமே சேராத இன்னொரு கோஷ்டி நம்ம தெ.கா.,ரஞ்சிதா அவரை காதலிக்குதாமா பாருங்கய்யா என்னா அழகா பக்தியோட அந்த புள்ள பணிவிடை செய்யுது அது இதுன்னு இவரு புளிகாகிதம் அடையிறாரு…இதைப்படிச்ச நித்யானந்த கம்பெனி டீலர் ஒருத்தர் அட இது நமக்கு தோணாமா போச்சேன்னு ரொம்ப பீல் பண்ணாரு.ஸ்யப்பா தெ.கா உங்க நிலைமையே ஏன் இப்படின்னு ஆகிப்போச்சே.

டிஸ்கி:என்னோட ஆதங்கமே ஏன் எல்லாரும் தனிமனித உரிமை, privacy, பெண்ணுரிமை அப்படிங்கிற காரணத்தினால் அவங்களை support செய்றீங்க? பல தனிமனித உரிமைகள் மீரப்பட்டாளும் இவங்க செய்தது தப்பு தான். இதை சன் டிவி வெளிக்கொணர்ந்ததில் தப்பே இல்லை.தனிமனித உரிமைகளும் மற்ற வெங்காயங்களும் மீறப்பட்டாலும் சமுதாயத்துக்கு ஒரு நன்மை விளைந்து இருக்கு, அது தான் நமக்கு தேவை.

மற்றபடி என்னை கேட்டா சாமியார்கள் தேவையே இல்லை சாமி டூ மனுஷன் மனுஷன் டூ சாமி ஒன் டூ ஒன் கனெஷன் இது தான் என்னோட நிலைப்பாடு.

இந்த ஆக்கத்தை சீர்ப்படுத்தி தந்த நண்பர்களுக்கு ரொம்ப நன்றி.

ஒரு வேளை நம்மளைத்தான் சொல்லுறாங்களோ?

ஜனவரி 2, 2010

எங் ஊரு பக்கமெல்லாம் சொல்லுவாங்க வாய்ல வடை சுடுறவன்னு. இந்த போட்டோவை பாத்த உடனே பதிவுலகத்திலையும் ஆன்லைன் அரட்டை அரங்களிலும் சவுண்டு விடும் நம்ம ஆளுங்க தான் ஞாபகத்துக்கு வராங்க. யோசிச்சி பாத்தா அது கூட உண்மையாத்தான் இருக்கு எவ்வுளவோ பிரச்சனைகளுக்கு சும்மா உய் உய்ன்னு சவுண்டு விட்ட நாம் இது வரைக்கும் எதுக்காவது தெருவுல இறங்கி போராடி இருக்கோமா?
null

தமிழ்நாட்டின் அடுத்த பெண் முதல்வரின் பேட்டி

December 12, 2009

சின்ன திரை புகழ் சே சே..பல விபச்சார வழக்குகள் புகழ் சே சே.. மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில செயலர் புவனேஸ்வரி தேர்தலில் போட்டியிட்டு வென்று  சமூதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து போராடுவாராமா.தமிழ்நாட்டு பெண்களே உங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறந்து விட்டது, உங்க குறைகளை தீர்க்க ஒரு ஜான்சி ராணி கிடைத்துவிட்டாரு. அடுத்த தேர்தலில் எப்படியாச்சும் வெற்றி பெற வெச்சிடிங்கன்னா உங்க குறைகள் தீர்ந்துவிடும்.முழுவீடியோவையும் இங்க பாத்து பிறந்ததன் பலனை அடைவிங்களாமா.

அப்பாவி அய்யாசாமி : ஏண்ணே சமூக சேவை செய்றவங்களுக்கு தானே கட்சி பதிவி எல்லாம் தருவாங்க?

கருத்து கந்தசாமி : ஏண்டா கூறு கெட்ட குக்கரு இவங்க ஆண் சமூதாயத்துக்கு செய்யாத சேவையாடா?

டிஸ்கி: கருத்து கந்தசாமியோட கருத்து சும்மா நகைச்சுவைக்காகவே சொல்லியிருக்கேன் யாரோட மனசையும் புண்படுத்த அல்ல.

பாய்லரே இல்லாத கடையில 70 பேர் டீ குடிச்சாங்களாமா

December 8, 2009

நம்ம பதிவை கூகுள் முடக்கிடிச்சே இதுக்கு மேல ரைஸ் சேவை சே தமிழ்சேவை செய்ய முடியாதேன்னு புல் பீலிங்கஸ்ல இருந்தா இன்னைக்கு StatCounter ரிப்போர்ட்டு அனுப்பி இருக்கு. என்னாலயே பாக்க முடியாத என்னோட பதிவை போன வாரம் 70 பேர் பாத்தாங்களாம.. சரியான கூறு கெட்ட குக்கருங்களா இருக்கானுங்க. இவனுங்களை நம்பி நான் வேற அட எதுவும் எழுதாம இம்முட்டு பேர் படிக்கிறாங்களே எதையாச்சும் எழுதுனா இட்லிவடை, லக்கி வகையராக்களை மிஞ்சிடலாமுன்னு ரெண்டு முணு ராத்திரி மல்லாக்க படுத்து கண்ட கனவெல்லாம் வேஸ்டாப்போச்சே..

கூகுளுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன் சினம் கொண்ட இந்த தமிழ்சிங்கத்தை இப்படி முடக்கலாமுன்னு மனப்பால் குடிக்காதிங்க அது உங்க கொம்பனியையே சிதைச்சிடும்.. ஒடம்பெல்லாம் பரவி இருக்கும் மாஸ்டர் பிரைனோடும்,ஒரு தொலைநோக்கு பார்வையோடு தான் சிங்கம் வேர்டு பிரஸ்ஸுலையும் குகையை பார்ம் பண்ணி வெச்சி இருக்கு.. இதுக்கு மேல நீங்களா வந்து கூப்புட வரைக்கும் (ரொம்ப சவுண்டு விடுறேனோ? அய்யா ராசா கூப்பிடுவிங்கில்ல) சிங்கம் இங்க தான் இருக்கும். அப்ப வரட்டா நெக்ஸ்டு வேட்டையில மீட் பண்ணலாம்…

சந்தோஷங்களுடன்
சந்தோஷ்…

நல்லாஇருங்கடா

ஜனவரி 7, 2008

ஹர்பஜன்சிங்கை மூன்று டெஸ்டு போட்டிகளில் இருந்து தடை செய்ததை எதிர்த்து போராட்டம் — செய்தி

நந்திகிரமுல நூத்துக்கணக்கான பேர் செத்துப்போனாங்க, ஒரு பொம்பளை புள்ளையை ஒட்டு துணி இல்லாம தெருவுல ஓட விட்டாங்க(அந்த புள்ளைக்கு துணி குடுக்குறதை விட்டுட்டு அதையும் சுத்தி சுத்தி படம் புடிச்சி TRB ரேட்டிங்கை ஏத்திகிட்டாங்க நம்ம மானங்கெட்ட பத்திரிக்கைகாரனுங்க).

இது வரைக்கும் நூத்துக்கணக்கான விவசாயிங்க சோத்துக்கு வழியில்லாம செத்து போயி இருக்காங்க.

நாட்டை எப்படிடா அமெரிக்காகாரனுக்கு அடகு வெக்கலாமுன்னு அதிகாரத்துல இருக்குற ஒரு கூட்டம் ரூம் போட்டு யோசிச்சிகிட்டு இருக்குது.

 இதை எல்லாம் தாண்டி நாட்டுல தினமும் நூத்துக்கணக்கான பிரச்சனை நடந்துகிட்டு இருக்குது.இதுக்கெல்லாம் கொதிக்காத இந்த கூட்டம் ஹர்பஜன்சிங்கை தடை செஞ்சதை கேட்டு கொதிச்சி போயி ரோட்டுல இறங்கி இருக்கு.

 பிரச்சனை இப்படி இருக்க CNN IBNல என்னடான்னா அவங்க அம்மாவை பேட்டி எடுக்குறாங்க, அவங்க பாட்டியை பேட்டி எடுக்குறாங்க,  பஞ்சாப்புல தலப்பா கட்டிட்டு ரோட்டுல யார் போனாலும், அவங்களுக்கு கிரிக்கெட் தெரியுதோ இல்லையோ அவங்களை எல்லாம் சுத்தி சுத்தி பேட்டி எடுக்குறாங்க.

களத்துல என்ன நடந்ததுன்னு யாருக்கு தெரியாது அதுக்குள்ள என் புள்ள தப்பே பண்ணலை, இதை எல்லாம் பாக்கும் பொழுது எனக்கு கோவம் கோவமா வருதுன்னு அவங்கம்மா(அந்தம்மாக்கு ஒரு 60-70 வயசாகும் அந்தம்மாவால சரியா பாக்க முடியுமான்னே தெரியலை) ஒரே சீன். ஏம்மா ஏன் ஏன் இந்த விளம்பரம் உங்களுக்கு?

 இது காலை நிலவரம் மதியதுக்கு மேல வேலை வெட்டி இல்லாம வூட்ல சும்மா இருக்குற கிரிகெட்டருங்க எல்லாம் மைக்கை எடுத்துட்டு ஆஸிக்களின் நிறவெறி, ICCயின் நிறவெறின்னு களத்துல ஆடுனாங்களோ இல்லையோ வாயால வடை சுட்டுட்டு கிளம்பிடுவாங்க.

 எங்க அடுத்த டெஸ்டு ஆடுனா சுலுகெடுதுடுவானுங்களோன்னு, நம்மாளுங்களும் இந்த பிரச்சனை முடியிற வரைக்கும் அடுத்த ஆட்டங்களை ஆட மாட்டோமுன்னு நம்மாளுங்க ஜகா வாங்கிடாங்க.

ஆஸ்திரேலியாகாரனுங்க வாய் கொழுப்பெடுத்தவனுங்க, அவனுங்ககிட்ட வாயும் இருக்கு ஆட்டமும் இருக்கு நமக்கு அப்படியா? பத்து பேர் சேர்ந்து 50 ஓவர் ஆட துப்பு இல்லாத நமக்கு எதுக்கு இந்த் வாய். முதல்ல ஆடுங்க அப்புறம் பேசுங்க.

ரோட்டுல இறங்கி போராடிகிட்டு இருக்கிற அண்ணனுங்களா அவரு ஆடுனாலும் காசு ஆடாட்டியும் காசு நமக்கு அப்படியா? நம்ம வாங்குற அஞ்சி பத்துக்கு இது தேவையா? போங்க போயி உருப்படுற வழியை பாருங்க.

சபாஷ் சரியான தீர்ப்பு

நவம்பர் 27, 2007

நாட்ல இந்த குறைந்த விலை விமான நிறுவனங்களின் தொல்லைக்கு ஒரு அளவே இல்லை. குறைந்த விலைக்கு விமான சேவையை அளிக்கிறேன் அப்படின்னு இவங்க அடிக்கிற லூட்டி இருக்கே யப்பா தாங்காது. விமானத்தில் போதிய பயணிகள் இல்லாட்டி, பயணிகளை பல மணி நேரம் காத்திருக்க செய்து அப்புறம் விமானத்தை கேன்ஸல் செய்வது, காலை விமானத்தில் கூட்டம் இல்லாட்டி அந்த விமானத்தில் உள்ள பயணிகளை அடுத்த விமானத்துக்கு மாற்றம் செய்வது, சில சமயம் விமானத்தை கேன்ஸல் செய்து அதுக்கு பதிலா ஆம்னி பஸ் டிக்கெட்டுகளை அளிப்பது, இது மாதிரி ஒரே ஆட்டம் தான். விமானம் கேன்ஸல் செய்யப்பட்டதற்கான காரணம் கேட்டால் தொழில்நுட்ப கோளாறு என்ற ஒரே பதில்.

இது மாதிரியான விமான கம்பெனிகளுக்கு ஆப்பு அடிக்கும் விதமாக இந்த தீர்ப்பு வந்துள்ளது. கோஏர் என்னும் குறைந்த கட்டண விமான நிறுவனம், தொழில்நுட்ப கோளாறு என்று கூறி கேன்ஸல் செய்த ஒரு விமானதில் பயணம் செய்த பயணிகள் அனைவருக்கு 15000 நஷ்டஈடு அளிக்குமாறு தில்லி உயர்நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது. இது போன்ற வியாபார நன்னடத்தை (Business ethics) இல்லாத கம்பெனிகள் இதற்கு பிறகாவது திருந்தினால் சரி.

கடன் அட்டைகளை பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டியவை- பாகம் II

நவம்பர் 24, 2007

இந்த பதிவில் நான் கடன் அட்டைகள் பற்றி முன்னுறையாக சில விஷயங்களை பற்றி சொல்லி இருந்தேன். இந்த பதிவில் கடன் அட்டைகளை வாங்குவதற்கு/உபயோகிப்பதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்களை பற்றி சொல்லி இருக்கிறேன் (இதில் கூறப்பட்டுள்ள விஷயங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவில் உள்ளவர்களுக்கே பொருந்தும், இந்தியாவில் உள்ளவர்களுக்கும் சில விஷயங்கள் உபயோகமாக இருக்கலாம்): 1. கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கும் பொழுது நீங்க கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் “universal default” clause அப்படிங்கற விஷயத்தை. நீங்க ஒரு அட்டையை வாங்கறீங்க ஏதோ ஒரு காரணத்தினால் சரியான தேதியில் உங்களால Minimum Balanceஜ கட்ட முடியவில்லை. அதை காரணம் காட்டி credit card கம்பெனிகள் உங்களின் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு உள்ளது.

இதுவே நீங்க வைத்து இருக்கும் கடன் அட்டையில் இந்த “universal default clause” இருந்து, நீங்க Minimum Balance கட்ட தவறும் பட்சத்தில் (உங்களின் வட்டி விகிதம் உயர இதை தவிர பல்வேறு காரணிகள் உண்டு) இவர்களினால் இவர்கள் அளித்த அட்டையின் வட்டி விகிதம் மட்டுமல்லாது மற்ற கம்பெனிகள் அளித்த அட்டையின் வட்டி விகிதத்தையும் உயர்த்த முடியும். இவ்வகையான அட்டைகளில் இருந்து தள்ளி இருப்பது நலம்.

2. பொதுவாக கடன் அட்டைகளை உபயோகித்து பணம் எடுப்பதை(Cash Advance) தவிர்க்க வேண்டும். அப்படி எடுத்தால் நீங்கள் மொத்த தொகையையும் கட்ட வேண்டியதாக இருக்கும் ஏனெனில் 0% APR நீங்கள் கடைகளில் அட்டையை உபயோகிக்கும் பொழுது தான். அதை உபயோகித்து பணம் எடுத்தால் அதற்கு அவர்கள் குறிப்பிட்டு உள்ள வட்டியை கட்ட வேண்டும். பெரும்பாலான அட்டைகளில் நீங்க கட்டும் பணம் Lower APRக்கு தான் கட்டியதாக தான் எடுத்துக்கொள்வார்கள்.

உதாரணமாக நீங்க எடுக்கும் பணத்துக்கு 25% APR என்று வைத்துக்கொள்வோம். நீங்க அடுத்த தவணைக்கு கட்டும் பணம் 0% APRக்கு உள்ள Purchasesக்கு தான் கட்டியதாக எடுத்துக்கொள்ளப்படும். நீங்க 0% APRக்கு முழுபணமும் கட்டி முடித்த பின்னரே 25% APRக்கு எடுத்த பணத்துக்கு கட்ட முடியும். எனவே முழு நிலுவைத் தொகையை கட்டினால் தான் நீங்க cash advanceக்கு எடுத்த தொகையை கழிக்க முடியும். சிறு சிறு தொகை வேண்டும் என்றால் சில சூப்பர் மார்கெட்டில் cash back அளிப்பார்கள் அதை உபயோகித்துக்கொள்ளலாம்.அதே போல தான் இந்த நிறுவனங்கள் மாதா மாதம் சில காசோலைகளை தருவார்கள்(cheque leaves) அவை பெரும்பாலும் 0% APR இல் வராது எனவே அதை உபயோகிக்கும் பொழுதும் கவனம் தேவை.0% Balance transferஅட்டைகளில் கவனிக்க வேண்டியது Balance transfer fee என்று கட்டணம் நிர்ணயம் செய்வார்கள், அது இருக்கிறதா என்று பார்த்துவிட்டு. அந்த கட்டணத்தில் உங்களுக்கு உடன்பாடு இருக்கும் பட்சத்தில் நீங்க Balance transfer செய்து கொள்ளலாம்.

3. ஒவ்வொரு மாதமும் அவர்கள் குறிப்பிடும் நாளில் Minimum Balanceஜ தவறாமல் செலுத்திவிட வேண்டும் இல்லாவிட்டால் உங்களின் credit history spoil ஆகிவிடும் மேலும் credit score குறைந்து வாய்ப்புக்கள் அதிகம். முக்கியமாக American Express அட்டைகளின் மீது தனி கவனம் செலுத்த வேண்டும், அவர்கள் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு ரொம்ப கெட்டவன் மாதிரியான ஆட்கள். ஒழுங்காக பணத்தை கட்டிக்கொண்டு வந்தால் நிறைய credit points அளித்து உங்களின் credit score நல்ல படியாக இருக்க உதவுவார்கள் இல்லாவிட்டால் oppsite தான்.

4. 0% APR அட்டைகளை உபயோகிக்கும் பொழுது சரியாக திட்டமிட்டு அது முடிவடையும் பொழுது கட்டும் அளவு பணம் வைத்து இருக்க வேண்டும். இல்லாவிட்டல் அதிகப்படியான வட்டி செலுத்தி கஷ்டப்பட வேண்டி இருக்கும். இது போன்ற அட்டைகளுக்கு கட்ட வேண்டிய தொகையை எங்காவது முதலீடு செய்துவிட்டால்(நஷடம் வராத இடத்தில்) அதில் இருந்து வரும் அதிகப்படியான பணம் நமக்கு லாபம் தான். பிறகு 0% APR முடியும் தருவாயில் முதலீட்டில் இருந்து எடுத்து கட்டி விடலாம்.

5. இலவசமாக அட்டைகள் கொடுக்கிறார்கள் என்று எல்லாவற்றையும் வாங்கி விட வேண்டாம். கவனமாக ஆராய்ந்து அவர்கள் அளிக்கும் offerகளை ஆராய்ந்து வாங்க வேண்டும்.

6. அதே போல முடிந்த வரையில் அனைத்து கம்பெனிகளின் அட்டைகளிலும் ஒன்று வைத்து இருப்பது நலம். அதாவது Visa, Master, Discover மற்றும் American Express அட்டைகளில் வகைக்கு ஒன்று என்று வைத்து இருப்பது credit scoreஜ வேகமாக வளர்க்க உதவும் என்று சொல்கிறார்கள்.

7. முடிந்த வரையில் அட்டைகளை cancel செய்வதை தவிர்க்கவும் ஏனெனில் நீங்க ஒவ்வொரு அட்டையை cancel செய்யும் பொழுதும் உங்க credit points களில் ஒரு குறிப்பிட்ட புள்ளிகளை இழக்கிறீர்கள் எனவே முடிந்த வரையில் ஒரு அட்டையை 5 வருடமாவது வைத்து இருப்பது மிக நலம்.

8. எந்த காரணத்தை தொடர்ந்து கடன் அட்டைகளுக்கு விண்ணப்பித்துக்கொண்டே இருக்க வேண்டாம், ஒரு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் சிறிது காலம் பொறுத்து இருந்து பின்னர் விண்ணப்பியுங்கள். நீங்க ஒவ்வொரு முறை விண்ணப்பிக்கும் பொழுதும் அந்த கம்பெனிகள் உங்க credit historyஜ சரி பார்பார்கள். Too many credit checks இருப்பது நல்லதல்ல.

9. எந்த காரணத்தை கொண்டும் எந்த அட்டையிலும் over limit போக அனுமதிக்காதீர்கள். அதுவும் நல்லது இல்லை. ஏகப்பட்ட பைன் போட்டு தீட்டிவிடுவார்கள். அதே மாதிரி அட்டைகளை உபயோகிக்கும் பொழுது ஒரே அட்டையில் மட்டும் கடனை ஏற்றாமல் எல்லா அட்டைகளிலும் சீராக உபயோகித்தால் நல்லது என்று சொல்கிறார்கள்.

10. அமெரிக்காவில் short termமாக இருப்பவர்கள் இதைப்பற்றி அதிகம் கவலை கொள்ள தேவையில்லை. நீண்ட நாட்கள் இருக்க முடிவு செய்து இருப்பவர்கள் கடன் அட்டைகளை வாங்கும் பொழுது சரியாக திட்டமிட வேண்டும் ஏனெனில் credit score and credit history இவை இரண்டுமே நீங்க வாங்கும் வீட்டுக்கடன், கார் கடன் மற்றும் அனைத்து வகையான கடன்களின் வட்டியை நிர்ணயிக்கும். கடன் அட்டைகள்களை சரியாக கையாளாவிட்டால் உங்களின் வட்டி விகிதம் தாறுமாறாக ஏறவும் வாய்ப்பு உண்டு.

11. அதே போல் ஏதாவது ஒரு காரணத்தால் உங்களால் Minimum Balance கட்ட முடியாவிட்டால் உங்களுடைய கடன் அட்டை கம்பெனியை அணுகி பேசி ஒரு தீர்வை காணுங்கள், அது எந்த வகையிலும் உங்களுடைய credit score/history ஜ பாதிக்காத வாரு பார்த்துக்கொள்ளுங்க. Good Credits will go off in 3 years Bad credits will take 7 years to get out of your history என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

நான் முன்னாடியே கூறியுள்ளபடி கடன் அட்டைகள் என்றாலே பயந்து நடுங்க வேண்டாம், அதை சரியான படி திட்டமிட்டு உபயோகம் செய்தால் அதனால் நமக்கு ஏகப்பட்ட இலாபம். மேலே கூறியவை எல்லாம் கடன் அட்டைகள் பற்றி எனக்கு தெரிந்த மிகச் சொற்பமான விஷயமே. இது பற்றி உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தெரிந்தால் சொல்லுங்களேன்.

இந்த பதிவில் தென்றல் சார் இந்தியாவில் உள்ள கடன் அட்டைகளை பற்றியும் சொல்லுமாறு கேட்டு இருந்தார். இந்தியாவில் கடன் அட்டைகள் வழங்கும் முறை unorganised ஆகவே இருக்கிறது. பெரும்பாலும் வங்கிகள் மாதம் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும் தான் வழங்குகின்றன என்று நினைக்கிறேன். அதை பற்றி எனக்கு தற்பொழுது சிறிது ஞானமே உள்ளது. முடிந்தால் அதைப்பற்றியும் ஒரு தனி பதிவு இடுகிறேன்.

ஏழு நாட்களில் முடிந்த 7 1/2

நவம்பர் 20, 2007

இவ்வுளவு தூரம் சொல்லியும், கேக்காம போன வாரம் முழுசும் நம்ம இம்சைக்கு நீங்க எல்லாம் பின்னூட்டம் போட்டு ஊக்கம் குடுத்தீங்க அதுக்கு ரொம்ப நன்றி. நேத்தே இந்த பதிவு போட வேண்டியது ஆனா சில தவிர்க்க முடியாத காரணத்தால போட முடியலை. உங்க ஆதரவுக்கும், ஊக்கத்துக்கும் ரொம்ப நன்றி.

எல்லா பின்னூட்டங்களுக்கும் என்னால பதில்/நன்றி சொல்ல முடியலை. அதுக்கு ஒரு தபா நீங்க மன்னிச்சிகோங்க.

நீங்க எல்லாம் இன்னொரு தபா என்னை மன்னிக்கனும், நான் எல்லாருடைய பதிவுகளையும் படிக்க முடியுது ஆனா பின்னூட்டம் மட்டும் போட முடியலை ஏன்னா பிளாக்கரை எங்க ஆபீசுல தடை செய்துட்டாங்க. பல நல்ல விவாதங்களில் பங்கு பெற முடியாம போகுது. படிக்க முடியாட்டியும் கூட பரவாயில்லிங்க ஆனாலும் முடியும் முடியாதுங்குற மாதிரி படிக்க முடியும் ஆனா பின்னூட்டம் போட முடியாதுங்கிறது ரொம்ப கொடுமைங்க. இன்னிக்கி கூட பாருங்க நம்ம வித்யா கலைவாணி மேடம் அமெரிக்காவை போட்டு தாக்கி இருக்காங்க, கை பர பரங்குது ஆனா பின்னூட்டம் போட முடியலை :( . அதே நிலைமை தான் சில பதிவுகளை சூப்பரா எழுதி இருப்பாங்க பாராட்டலாமுன்னு என்னையும் அறியாம கமெண்டைபோட முயற்சி செய்தால் “இந்த தளம் தடை செய்யப்பட்டுள்ளதுன்னு வரும் :( (“. தொடர்ந்து நீங்க எல்லாரும் நீங்க ஆதரவு இதே மாதிரி ஆதரவு தர வேண்டும்.

கடன் அட்டைகளை பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டியவை – பாகம் 1

நவம்பர் 17, 2007

கடன் அட்டைகள் (Credit Cards) இன்றைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தை பெற்றுள்ளன (முக்கியமாக அமெரிக்க வாழ்க்கையில்). அதை கையாள்வது ஒரு தனி கலை. பெரும்பாலான கடன் அட்டை நிறுவனங்கள் இந்தியர்களை கண்டாலே மிரண்டு ஓடுகின்றனர். ஏன்னா நம்ம ஆளுங்க அதை நன்றாக கையாண்டு ஒரு பைசா கூட வட்டி கட்டாமல் அழகாக உபயோகிக்கின்றனர். கடன் அட்டைகளை கண்டாலே நடுங்கி அதை உபயோகம் செய்யாமல் இருப்பது முட்டாள்தனம் என்றே சொல்லலாம். அதை திட்டமிட்டு உபயோகித்தால பல பயன்பாடுகள் உண்டு நிறைய பலன்களை பெறலாம். கடன் அட்டைகளை பற்றி எனக்கு தெரிந்த வற்றை இங்கே விளக்க முற்படுகிறேன். முதலில் Credit History மற்றும் Credit Scoreஜ பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Credit History என்பது ஒரு நபரின் ஒரு குறிப்பிட்ட காலத்தின் செலவழிக்கும் திறன் அல்லது செலவழித்த முறையின் வரலாறு என்று கூறலாம். இந்த வரலாற்றை Credit Bureauக்கள் எனப்படும் கம்பெனிகள் பதிவு செய்கின்றன. Bad Credit History உருவாவதற்கான காரணங்கள் Bankrupsy, கடனை சரியான சமயத்தில் திருப்பி செலுத்தாமல் இருப்பது போன்றவை.

Credit Score உங்களுடைய செலவழிக்கும் திறனை பொருத்து அமையும். Credit Score 300 முதல் 900 பாயிண்டுகள் வரை இருக்கலாம். இது ஒரு complex maths என்றே சொல்லலாம். உங்களுடைய credit score பல்வேறு காரணிகளால் தீர்மானம் செய்யப்படுகிறது.

Credit History மற்றும் Credit Scoreகளை பற்றி மேலும் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்.கடன் அட்டைகளில் பல்வேறு வகைகள் உண்டு (நான் அட்டைகளின் Benefitsஜ பொருத்து வகைப்படுத்தி உள்ளேன் சரியா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் திருத்திக்கொள்கிறேன்.) அவற்றை பற்றி பார்க்கலாம். பெரும்பாலானவை 0% APR on Purchases and Balance Transfer, Cash Back, Sky Miles, Bonus Points போன்றவை

1. 0% APR வகை அட்டைகளை பார்ப்போம்.

0% APR(Annual Percentage Rate) என்றால் நீங்கள் இந்த அட்டையை உங்கள் தினசரி தேவைக்காக உபயோகப்படுத்தும் பணத்துக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வட்டி கட்ட தேவையில்லை(குறைந்த பட்சம் 6 மாதம்), ஆனால் அவர்கள் குறிப்பிடும் Minimum Payment Dueவை கட்ட வேண்டும் (பெரும்பாலும் மிகச் சொற்பமான தொகையாக இருக்கும்).
இதில் இன்னொரு வகை 0% APR on Balance Transfers, இதில் விஷேசம் என்ன வென்றால் இன்னொரு கடன் அட்டையில் இருக்கும் Balanceஜ அதாவது நீங்க வேறு கடன் அட்டைகளில் செலுத்த வேண்டிய தொகையை இந்த அட்டைக்கு மாற்றிக்கொள்ளலாம், மேலும் அந்த தொகைக்கு அவர்கள் குறிப்பிடும் காலம் வரை வட்டி கட்ட தேவை இல்லை.
இன்னும் சில நிறுவனங்கள் அவர்கள் வழங்கும் காசோலைக்கும் இந்த மாதிரி வசதியை தருவார்கள்.
இந்த வசதியை பயன்படுத்தி நீங்கள் உங்களின் Savings,Fixed deposit கணக்குகளுக்கும் பணத்தை transfer செய்து கொள்ளலாம்.

2. Sky Miles

இந்த வகை அட்டைகள் நீங்க சேகரிக்கும் புள்ளிகளை பொறுத்து இலவச விமான பயணம், free upgrade போன்ற வற்றை பெற்று தரும். இந்த வகை அட்டைகள் பெரும்பாலும் இலவசமாக கிடைக்காது வருடாந்திர கட்டணம் இருக்கும். சில அட்டைகள் முதல் வருடம் மட்டும் இலவசமாக இருக்கும் அது போன்ற அட்டைகளை வாங்கி உபயோகித்து பின்னர்
முதல் வருடம் முடிந்த உடன் cancel செய்து விடலாம்.

3. Points

இந்த வகை அட்டையில் நீங்க உபயோகிக்கும் அல்லது செலவு செய்யும் பணத்துக்கும் ஒரு புள்ளி இரண்டு புள்ளி என்று அளிப்பார்கள் ஒரு குறிப்பிட்ட புள்ளிகளை நீங்க அடைந்த பின்னர் அவர்கள் குறிப்பிடும் இலவச பொருட்களை நீங்க உங்களின் புள்ளிகளை உபயோகித்து பெற்றுக்கொள்ளலாம்.

4. Cash Back

இந்த மாதிரியான அட்டைகளின் மூலம் நீங்க செலவு செய்யும் பணத்தின் ஒரு பகுதியை (5% – 10%) என்று திருப்பி கொடுப்பார்கள். இவ்வகை அட்டைகளை நீங்க பெரிய பெரிய பொருட்கள் வாங்க உபயோகித்தால் எ.கா. Camera, Plasma TV போன்றவற்றை வாங்க உபயோகித்தால் பெரும் சேமிப்பாக இருக்கும்.

5. Secure Credit Card

இது ஒரு வகையான debit card என்றே கூறலாம். முதல் முதலில் Credit History இல்லாதவர்கள் இங்க வரும் பொழுது Credit Historyஜ வளர்க்க இது போன்ற அட்டைகள் உபயோகித்து வளர்த்து கொள்ளலாம். இந்த வகை அட்டைகளில் முதலில் நீங்க ஒரு தொகையை முன்பணமாக கொடுக்க வேண்டும், பின்னர் அவர்கள் நீங்க முன்பணமாக கொடுத்த தொகைக்கு ஈடான Limit உள்ள ஒரு அட்டையை கொடுப்பார்கள் நீங்க அதை கடன் அட்டை போல உபயோகித்துக்கொள்ளலாம்.

இதை தவிர பலவகையான அட்டைகள் உண்டு உங்களின் credit history ஏதாவது ஒரு காரணத்தினால் மோசமான இருந்தால் அதை சரி செய்யும் வகையான அட்டைகள், credit scoreஜ மேம்படுத்த, மாணவர்களுக்கு என்றே பிரத்யோகமான அட்டைகள், அப்புறம் தொழில் செய்பவர்களுக்கு என்று பலதரப்பட்ட அட்டைகள் உண்டு.

நான் உபயோகித்த வரையில் American Express நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மிக நன்றாக உள்ளது. அது போல சேவையும் நன்றாக உள்ளது ஆனால் இவ்வகை அட்டைகளை அனைத்து இடங்களிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதோ போல் Bank of America போன்ற ஒரு மோசமான வாடிக்கையாளர் சேவையை அமெரிக்காவில் பார்க்க முடியாது.
தொலைபேசி மூலம் வாடிக்கையாளர் சேவையை பெற மணிக்கணக்கில் காத்து இருக்க வேண்டும். நண்பனின் கடன் அட்டை தொலைந்து விட்டதை அவர்களுக்கு தெரிய படுத்தி அந்த அட்டையை deactive செய்ய நாங்க சுமார் 1 1/2 மணி நேரம் போனில் காத்து இருக்க வேண்டியாதாயிற்று. அதே போல் இவர்கள் aliens அதாவது அமெரிக்க பிரஜைகளை தவிர ஏனையோருக்கு கடன் அட்டைகள் தருவதை விரும்புவதில்லை(என்னுடைய credit score அருமையாக இருந்த பொழுதே இவர்கள் இருமுறை reject செய்து விட்டார்கள்.) .

என்னுடைய சாய்ஸ் எப்பொழுதுமே Cash Back offer உள்ள கடன் அட்டைகள் தான், அதற்கு பிறகு Sky Miles வகையான அட்டைகள், அதற்கு பிறகு தான் மற்ற வகை. இதன் அடுத்த பகுதியில் கடன் அட்டைகளை கையாளும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை பற்றி சொல்கிறேன்.

விவசாயிகளின் தேவதை

நவம்பர் 16, 2007

இங்கிலாந்தை சேர்ந்த Reutuers நிறுவனமும், மகாராஷ்டிராவை சேர்ந்த MCX நிறுவனமும் இணைந்து மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகளின் நலனுக்காக Market Light என்ற சேவையை துவக்கி உள்ளது. இதன் நோக்கம் விவசாயிகளுக்கு விவசாய பொருட்களின் தற்போதைய சந்தை விலை, அதாவது பல்வேறு மண்டிகளில் ஒரு குறிப்பிட்ட பொருளுக்கான விலை எவ்வுளவு என்று தெரியப்படுத்துவதே. இத்திட்டதில் சேரும் விவசாயிகளுக்கு  அவர்கள் விரும்பும் பொருளுக்கான வாங்கும் விலை அதாவது எந்த எந்த மண்டிகளில் எவ்வுளவு விலை தருவார்கள் என்று  தகுந்த இடைவெளியில் அல்லது அவர்கள் விரும்பும் பொழுது, குறுஞ்செய்தி(SMS) மூலம் தெரிவிப்பார்கள். தற்பொழுது இந்த திட்டம் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டதில் சேர்த்தின் மூலம் விவசாயிகளுக்கு அவர்களின் பொருட்களுக்கு அதிகபட்ச விலை கொடுக்கும் மண்டியை பற்றி தெரியவரும். இந்த திட்டத்தில் சேர்ந்ததன் மூலம் சுமார் 30% வரை அதிக விலை கிடைத்ததாக பல்வேறு விவசாயிகள் கூறி இருக்கின்றனர். இலவச சேவையாக செயல்பட்டு வரும் இந்த சேவைக்கு மாதம் 60 ரூபாய் வரை செலுத்த விவசாயிகள் தயாராக உள்ளனர். இந்த சேவையில் விலை பொருட்களுக்கான விலை மட்டுமில்லாமல், விவசாயம் பற்றிய செய்திகள்,வானிலை அறிவுப்புகள் முதலானவையும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படுகிறதாம்.

தற்பொழுது இத்திட்டத்தின் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள  25 மண்டிகளின் விலை நிலவரம் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படுகிறதாம், சுமார் 4000 விவசாயிகள் வரை இந்த சேவையை பயன்படுத்துகிறார்களாம்.எனக்கு இந்த திட்டம் மிகவும் அருமையான திட்டமாக தெரிகிறது. தமிழகத்திலும் இது போன்ற திட்டம் அமல்படுத்தப்பட்டால் அது விவசாயிகளுக்கு மிகப்பெரிய நன்மையாக இருக்கும். ஏர்டெல். வோடாபோன் போன்ற நிறுவனங்கள் இதை செயல்படுத்த முயற்சிக்கலாம், அது இருவருக்கும் பெரிய லாபமாக இருக்கும்.

Follow

Get every new post delivered to your Inbox.