பொதுவா பத்திரிக்கையில ஒரு ஓரத்துல துளியூண்டு பேரு வந்தாலே பெருமையா இருக்கும். ஒரு முழு பக்கமும் நம்மளை பத்தி வந்தா எப்படி இருக்கும்..
ஒரு 5 – 6 வருடங்களுக்கு முன்னாடி என் பதிவை பத்தி தினமலர்ல வந்தது அப்புறம் ஜுவில ஒரு கட்டுரை எழுதி தரச்சொன்னாங்க, அதெல்லாம் குட்டியா சிறு பத்தியில வந்தது. ஆனா இந்த தடவை ஒரு முழு பக்கம்.அதுவும் விகடன் மாதிரியான ஒரு பாரம்பரிய பத்திரிக்கையில ஒரு பக்கம் முழுவதும் வந்தா எப்படி இருக்கும்.
ஊர்ல ஒரு பய மதிக்காது இன்னிக்கு காலையில இருந்து ஒரு 5 – 6 பேரு போன் பண்ணி சொல்லி இருக்காங்களாம்.திரும்பவும் எழுதலாமுன்னு யோசிக்கிறேன்.. ஓடுங்க ஓடுங்க இந்த மிருகம் உங்களை நோக்கி தான் வந்துகிட்டே இருக்கு.. 🙂
Good. Keep it up.
thanks Cheenu