சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உண்மையான அக்கரை உள்ளது போல தி.மு.காவும் அதன் கூட்டணி கட்சிகளும் நாடகமாடுகின்றன அவர்களுக்கு ஈடுஈணையாக எதிர்கட்சிகளும் நாடகம் ஆடுகின்றன. உண்மையான அக்கரை இருந்தால், இந்த திட்டம் விரைவாக முடிக்கபடாவிட்டால் நாங்கள் எங்களின் ஆதரவை வாபஸ் வாங்கிக்கொள்வோம் என்று சொல்ல வேண்டியது தானே? பேரனுக்கு அமைச்சர் பதவி பெற்றுத்தர டில்லிக்கு நடையா நடந்தவர், தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சனையான இந்த பிரச்சனைக்கு ஒரு பந்த்/உண்ணாவிரத்த்தோட முடிச்சிக்கிட்டாரு.
அதையாவது ஒழுங்கா செய்தாரா? பதவி என்பது எனக்கு துண்டு போல, மானம் என்பது வேட்டி (எனக்கு சரியாக தெரியவில்லை இது போன்ற பொருள் தரக்கூடிய வாக்கியம் ஒன்றை சொல்லி இருந்தார்) போல அப்படின்னு சொன்னவரு. ஆனா இன்னிக்கு பாருங்க பந்த் நடத்தியது தவறு, தமிழகத்தில் ஏன் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கூடாது அப்படின்னு கேட்ட உடனே, நம்ம தலைவரு துண்டை கையில புடிச்சிகிட்டு உண்ணாவிரத பந்தலில் இருந்து கிளம்பி போயி கோட்டையில உட்கார்ந்து கொண்டார். ஏன் சாமி எனக்கு பதிவி போனாலும் பரவாயில்லை சேது சமுத்திர கால்வாய் தான் முக்கியம் அப்படின்னு முழு நாளும் உக்கார வேண்டியது தானே? இவரு கதை தான் இப்படின்னா,
பிஜேபி ஆட்சியில் இந்த சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்த பொழுது இன்னொரு தலைவரு, வெற்றி வெற்றி தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையை நிறைவேற்றி விட்டோம், அப்படின்னு அழுகாச்சியோட கூவிகினே தமிழ்நாடு முழுவது சுத்தினாரு, அப்ப தெரியலையா அவருக்கு ராமர் பாலத்தை இடிப்பாங்கன்னு, இப்ப கட்சி மாறின உடனே சகோதரி பாசத்துல அய்யோ பாலத்தை உடைக்கிறாங்களே எப்பேர்பட்ட பாலம் அப்படின்னு ஒரே சவுண்டு இவரு.
அம்மா என்னடான்னா சீன் ஓப்பனிங்கல சவுண்டே இல்லாம இருந்தாங்க, ராமரு சீன்ல வந்த உடனே, அய்யோ இடிக்கிறாங்களே இடிக்கிறாங்களே அப்படின்னு சவுண்டு, அடுத்து பந்த் நடத்தறாங்களேன்னு ஒரு சவுண்டு. அடுத்து ஆளுங்கட்சிகளே சும்மா இருக்கும் பொழுது இவங்க “பந்த் வெற்றி பந்த் வெற்றி அப்படின்னு” சவுண்டு விட்டு, ஆட்சியை கவிழ்க்க பாக்குறாங்க.
நல்ல வேளை இந்த விசயத்துல கூத்தாடிங்க அவ்வுளவா சவுண்டு விட்டு மாட்டிகலை, இல்லாட்டி அவனுங்க சாயமும் இதுல வெளுத்து போயி இருக்கும்.
இப்படி அரசியல கட்சிங்க தான் இருக்காங்கன்னா, நம்ம மக்களை பாருங்க அவங்க மாநிலத்தின் முதல்வரின் தலைக்கு ஒரு சாமியார் விலை வைக்கிறார் அதை எதிர்த்து ஒருத்தன் கூட சவுண்டு விடலை(ஒரு வாரம் கழிச்சி ஏதோ நாலு கல்லு வுட்டாங்க அம்முட்டு தான்). இதுவே மத்த மாநிலங்களில் நடத்து இருந்த என்ன நடத்து இருக்கு யோசித்து பாருங்க.
இந்த சேது சமுத்திர திட்டத்துல ரெண்டு மேட்டர் தெளிவா புரியுதுங்க, ஒண்ணு தமிழன் மானெங்கெட்டவன், கோழை, சுயநலவாதி, ஒற்றுமை இல்லாதவன், எவன் எக்கேடு கேட்டா நமக்கு என்ன அப்படின்னு இருப்பான். இன்னொன்னு தமிழநாட்டோட முன்னேற்றத்துக்கு எந்த கட்சியும் பாடுபடலை.
சேது சமுத்திர திட்டம் ஒரு உதவாக்கரை திட்டம் அப்படின்னு நரேன் இங்க அழகா சொல்லி இருக்காரு போயி படிச்சித்தான் பாருங்க.